இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114
ரொட்டித்
பாரத்: ஒரே ஒரு நிபந்தனை! புத்தகம் வெளி வருகிற வரையில், விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.
நண்பன்: வெடிக்குண்டுபோல, திடீரென்று புத்தகம் வெளிவரவேண்டும். அவ்வளவுதானே...சரி..
[காகிதக் கட்டுகளை எடுத்துக்கொண்டு போகிறான். சிகரெட் பிடித்தபடி பாரத் உலவுகிறான் கூடத்தில், பலமான யோசனை செய்தபடி. தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறான், கதிர்வேல். பாரத்பூஷண் ஒரு கணம் பயம் கொள்கிறான். மறுகணமே சமாளித்துக் கொண்டு, சிரித்த முகத்தோடு, கதிர்வேலுவை அணைத்தபடி வரவேற்கிறான். அணைத்துக் கொள்ளும் போதுதான், கதிர்வேலுவின் உடம்பு நெருப்பாகக் கொதிப்பது தெரிகிறது.]
பாரத்: (பதறியது போலாகி) அடடா! கதிர்வேல்! என்ன இது... இவ்வளவு கடுமையான ஜூரம் கண்டுமா எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை?
கதிர்: (மூச்சுத் திணறும் நிலையில்) நாலு நாட்களாக இப்படியேதான் இருக்கிறது...தனியாக இருக்கப் பயமாகி விட்டது. அதனாலேதான், நீ இருக்கிற இடத்திலேபோய் விழுந்துவிடுவோம் என்று வந்து விட்டேன்...
பாரத்: (கனிவு காட்டுபவன் போல) பைத்தியக்காரன்! நான் வேறே எதற்குத்தான் இருக்கிறேன்? வா, வா!
[அணைத்தபடி உட்புற அறைக்கு அழைத்துச் சென்று தன் படுக்கையிலே படுக்க வைத்து...]
பேசாமல் படுத்துக்கொள்..டாக்டரை வரச் சொல்கிறேன். பயப்படாதே! பயப்படாதே! எல்லப்பா! டேய், எல்லப்பா!
[பணியாள் ஓடோடி வருகிறான்]