துண்டு
121
ராம்: வேறு எப்படி நினைப்பது? நாடே கூறுதே! புத்தகம் நீ எழுதிய புத்தகம்தானே! அதற்காகத்தானே இத்தனை பாராட்டுதல்.
பாரத்: பைத்தியக்கார அப்பா நீங்கள்! ஏழை எளியவர்கள் என்ன எண்ணுவார்கள், என்னென்ன பேசுவார்கள் என்பதை எடுத்துக் காட்டுவது அந்தப் புத்தகம். எனக்காப்பா அந்த எண்ணம் தோன்றும்.
ராம்: ஊரே நம்பும்போது...
பாரத்: ஊர் எதை நம்பவில்லை, இதை நம்பாதிருக்க? அப்பா! அது கிடக்கட்டும்; நமக்கு இது ஒருவிதத்திலே நல்ல வாய்ப்பு. இனி நானே தொழிலாளர் தலைவனாகி விடமுடியும். என் வார்த்தைதான் அவர்களுக்குச் சட்டம். 'ஆலை'யிலே வருகிற லாபம் உங்களுக்குத்தான். ஆனால் இப்போது கொடுத்தால் வீணாக செலவழித்து விடுவீர்கள்; சேர்த்து வைத்துப் பிறகு தருகிறேன் என்றுநான் சொன்னால் மறுக்க மாட்டான் எந்தத் தொழிலாளியும். ஆலை நிர்வாகத்தை நானே ஏற்றுக் கொண்டு நடத்தலாம்! தொல்லை...இல்லை...எல்லாம் சரி...ஆனால் கதிர்வேலுவுடைய வாயை மூட வேண்டுமே! அதற்கு வழி?
ராம்: (பெருமிதத்துடன் மகனைப் பார்த்து) உனக்கா தெரியாது...நம்ம வழிகளெல்லாம் ரொம்பப் பழசு...கரடு முரடா இருக்கும்...அரிவாளாலே வெட்டற மாதிரி இருக்கும். நீயே யோசனை செய்தா நல்ல வழி தெரியும்.
பாரத்: ஒரு வழி இருக்குதப்பா! உன்னோட நண்பர் லோகன் உதவி செய்த...
ராம்: சொன்னால் செய்கிறார்...நமக்குப் பலவிதத்திலும் கட்டுப்பட்டவர். என்ன செய்யணும், சொல்லு...
பாரத்: கதிர்வேலுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி, பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பிவிட வேண்டும்...