பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கண்ணாயிரத்தின்

சிங்.: போறாத வேளைதான்...ஐயா! பர்மிட் இப்படித் தாறுமாறா கைமாறுவது தவறுன்னு சட்டம் சொல்லு. தெரியுதா?... உன் விஷயமாகத்தான் மோப்பம் பிடிக்கிறாங்கன்னு எனக்குத் தெரியாது! நேத்துத்தான் பெரிய அதிகாரி ஒருத்தர் வந்து தகவல் கேட்டாரு. இது விஷயமா!...நான், 'சத்தார் சாய்பு விடம் பர்மிட்டு இருக்கிறது. ஆனா... வியாபாரம் செய்யப் போதுமான பணம் இல்லே; யாருக்காவது விற்று விடுவான்'னு சொன்னேன். முன்கூட்டி என்னிடம் ஒரு பேச்சு! 'இப்படி ஒரு பர்மிட்டு இருக்குது. வாங்கட்டுமா'ன்னு கேட்டிருந்தா...நான் அதிகாரிக்கு வேறே போக்குக் காட்டி இருப்பேன். நான் என்னத்தைக் கண்டேன்? தெரிந்ததை—உண்மையைச் சொல்லிவிட்டேன். அவரு அப்பவே தந்தி கொடுத்திட்டாரே டில்லிக்கு! பர்மிட்டு பறிமுதலாயிடுமே...

வந்த.: (பதறி) பாதிப்பணம் அட்வான்சு கொடுத்து விட்டேனே...

சிங்.: பணம் கிடக்கட்டும்...ஏதாவது ரசீது ஒப்பந்தம் இதிலே கையெழுத்து உண்டா?

வந்த.: இல்லிங்க...

சிங்.: தப்பிச்சிக்கிட்டே போ! பணம் போனா போருதய்யா—கம்பி எண்ணாம இருந்தாப் போதும்; இப்பவே, சத்தாருகிட்டச் சொல்லிடு, நமக்கு வேண்டாம்யா பர்மிட்டுன்னு...

வந்த.: ஆகட்டுங்க...பர்மிட்டுக்காக நான் முயற்சி செய்தது குற்றமில்லிங்களே?

சிங்.: மூச்சு விடாதேய்யா யாரிடமும்!...அய்யோவ்! ஒரு வேலை செய்...அந்த அதிகாரி ஊரை விட்டுப் போறவரைக்கும், நீ இங்கே இல்லாமலிருந்தா...நல்லது. ஏன்னா, ஏதாவது அவன் கேட்டு, நீ எதையாவது உளறிவைத்தா...ஆபத்தாயிடும். பேசாம ஒரு நாலு நாளைக்கு வெளியூர் போய் இரு.