பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கண்ணாயிரத்தின்

சிங்: (ஆத்திரத்துடன்) என்னிடமே சொல்றயா அந்த அண்டப் புளுகை? ஏண்டா! என்னை என்ன ஏமாளின்னே தீர்மானித்துவிட்டாயா?

கண்: அண்டப்புளுகு—ஆகாசப் புளுகுன்னு என்ன வேணுமானாலும் சொல்லிக் கொள்ளுங்க. எனக்குத் தெரியாதுன்னு சொன்னா, மூச்சு விடாமே பேசிக் கொண்டே இருக்கிறீங்களே...

சிங்: (உருக்கமாக) ஏண்டா உனக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போச்சு? சிங்காரவேலன்னா, நாலு பேருக்கு உபகாரி. நம்பினவர்களைக் கெடுக்காதவன், உண்மைக்குப் பாடுபடுகிறவன் என்கிற நல்லபேர் இருக்குதடா! ஊரார் மெச்ச வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறேன்...நீ பொறந்தே, அதைக் கெடுக்க. கூசாமே —பயப்படாமே பொய் பேசறே என்னிடமே.

[கண்ணாயிரம் சோகமாக மாடி செல்கிறான். சிங்காரவேலரும் செல்கிறார். கண்ணாயிரம் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொளகிறான். கவலையுடன் சிங்காரவேலர், அங்குள்ள சோபாவில் உட்காருகிறார். அன்னபூரணி வருகிறார்கள்.]

அன்: யார் வந்திருந்தது கீழே...?

சிங்: யாரோ பள்ளிக்கூடத்து வாத்தியாரம்மா...தர்மம் கேட்க...

[அறைக்குள்ளே இருந்து கண்ணாயிரம் வெளியே வந்து]

கண்: என் ரிஸ்ட்வாட்சை யார் எடுத்தது?

சிங்: ரிஸ்ட்வாட்ச் காணோமா?

அன்: தங்கச் செயினாச்சே, எங்கே தொலைத்து விட்டே?