பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

51

நிலைமை: சிங்காரவேலர் கணக்குப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பிவைத்த ஆசாமி வருகிறான். தலையைச் சொரிந்தபடி நிற்கிறான். அவனைக் கண்டதும் போன காரியம் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார். வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில்...

சிங்: சரி, சரி!...போ! போ! கையாலாகாதவன்...

[வேலையாளைப் பார்த்து]

காரை எடுக்கச் சொல்லு—பழசு—போர்டு...

[ஆசாமியைப் போகச் சொல்லி கையை அசைக்கிறார். அவன் கவலையுடன் செல்கிறான்.]


காட்சி—9.

இடம்: நாடியா வீடு
இருப்போர்: நாடியா, சிங்காரவேலர்.
நிலைமை: சிங்காரவேலர், ஒரு பழைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எதிர்ப் புறம் நின்று கொண்டிருக்கிறாள் நாடியா. அவள் பார்வையில் வெறுப்பும் அலட்சியமும் கலந்திருக்கிறது. நாடியா நின்று கொண்டிருக்கும் போக்கு, சிங்காரவேலரை எழுந்து போகலாம் என்று எடுத்துக் கூறுவது போலிருக்கிறது. அவள் போக்கைக் கண்டு சிங்காரவேலர்