பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ரொட்டித்

[மோட்டார் சத்தம் கேட்கிறது]

இருவரும் பதறுகிறார்கள். செய்தித்தாளை, அவசரமாக வேலையாள் எடுக்கச் செல்கிறான். அது காற்றிலே பறக்கிறது.

அதிலே ரொட்டித் துண்டு விளம்பரம் கொட்டை எழுத்திலே இருக்கிறது.

மோட்டாரில் இருந்த ராம்லால் கண்களில் விளம்பரம் தெரிகிறது. கீழே இறங்கி, வேகமாக உள்ளே செல்கிறார்.

காட்சி—4.

இடம்: மாளிகை உட்புறக்கூடம்; அலங்கார இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு புறம், மேஜை மீது டெலிபோன் இருக்கிறது.

இருப்: நடுத்தர மாது சோபாவில் உட்கார்ந்திருக்கிறார்கள், பூ தொடுத்துக்கொண்டு, நிறைய நகைகள் பூட்டிக் கொண்டு, சரிகைப் புடவைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முகத்திலே கவர்ச்சி துளியும் இல்லை. நிம்மதியான வாழ்க்கையின் மெருகு மட்டும் முகத்தில் தெரிகிறது.

நிலைமை: ராம்லால் உள்ளே நுழையக் கண்டு, மாது எழுந்து நின்றபடி...

சுப்புத்தாயி: ரயில் லேட்டா?

[ராம்லால் கோட்டைக் கழற்றி ஒரு சோபாவில் வீசியபடி]

ராம்: உம்...உன்னோட கடிகாரம் ஓடுது! கண், மண் தெரியாமல், ரயில் வர வேண்டிய நேரத்துக்குத்தான் வந்தது.