பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

83

ராம்: (புத்தகத்தின் பக்கம் எடை விலை இவைகளைப் பார்த்துவிட்டு) விலை 15 ரூபாயா? ஒரு புத்தகத்தின் விலை 15! யார்யா இவ்வளவு விலை கொடுத்து வாங்குவாங்க?

கணக்: கிடைக்கலிங்களே தேடினாக்கூட...அவ்வளவும் வித்துப் போச்சு...நம்ம ஆலையிலே இருக்கிறவங்க மட்டும் நூறு புத்தகம் வாங்கி இருக்காங்க...

ராம்: என்ன எழுதி இருக்கிறான்! ஆமா, இதை அச்சடிக்க பணம் எவ்வளவு கொடுத்திருக்கே?

கணக்: பணமா! நாமளா! ஒரு காசு கிடையாதே! நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு, புத்தகக் கடைக்காரர் வந்தாங்க; செலவு நமக்கு ஏது? சின்னவருக்கு அஞ்சோ ஆறோ ஆயிரம்ங்க கொடுத்ததாப் பேசிக் கொள்றாங்க...

ராம்: இந்தப் புத்தகத்துக்கா! புத்தகம் எழுதினா அவ்வளவு பணம் கிடைக்குதா? என்னதான் எழுதி இருக்கிறான் அப்படி?

[புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.]


காட்சி—5

இடம்: மணிமண்டபம்

இருப்: பாரத்பூஷண் விழாவில் கலந்து கொள்வோர்.

நிலைமை: பாரத்பூஷண், 25 வயதுள்ள இளைஞன்—அழகிய கம்பீரமான தோற்றம் ஆடம்பரமற்ற முறையில், உடை தரித்துக் கொண்டிருக்கிறான். கையிலே ஆயிரம் ரூபாய் விலையுள்ள முதல் தரமான கடிகாரம். அழகுக்கு அழகளிக்கும் பளபளப்பான பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. முக மலர்ச்சியுடன், பாரத் வேலைப்பாடுள்ள