பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதவுரை:

பெருமகன்– புருஷோத்தமனாகிய ஶ்ரீராமன்; என் வயின் பிறக்க– என்னிடத்திலே பிறக்க–(அவ்விராமனுக்கு) சீதையாம்– சீதையாகிய; திருமகள்– திருமகளது; மணவினை– மணக்கோலத்தை; தெரியக் கண்ட நான்–கண்ணாரக் கண்ட நான்; அருமகன்–அருமை மகனாகிய அவன்; நிறை குணத்து– நிறைந்த குணத்தை உடைய; அவனி மாது எனும்– பூமிதேவி என்கிற; ஒரு மகள்– ஒரு பெண்ணை; மணமும்– திருமணம் செய்து கொள்கிற கோலத்தையும்; கண்டு உவப்ப– கண்டு களிக்க; உன்னினேன்– உளங் கொண்டேன்.

இராமன் முடிசூட ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லு மாறு சோதிடர்களுக்குப் பணித்தான் மன்னன் தசரதன்.

“நாளையே நல்ல நாள்” என்று கூறினார் சோதிடர்.

பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கட்டளையிட்டான் தசரதன். நகரத்தை அழகு செய்யுமாறு கூறினான். இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை நகர மக்களுக்குப் பறைசாற்றி அறிவிக்குமாறு கட்டளையிட்டான்.

இச் செய்தியறிந்தாள் மந்தரை எனும் கூனி.


அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்.