146
மா. இராசமாணிக்கனார்
வாராதே; வேண்டுமாயின் பகலில் வந்து செல்' எனக் கூறுவாள்போல், அவன் மனத்தை மணத்தின் பக்கம் திருப்பியது இது:
"கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை,
நனவில் தான்செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு கதும்என வெரீஇப்,
புதுவதாக மலர்ந்த வேங்கையை
5
அது என உணர்ந்து அதன் அணிநலம் முருக்கிப்
பேணா முன்பின் தன்சினம் தணிந்து, அம்மரம்
காணும் பொழுதில் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட!
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு, நீ இன்ன
10
காதலை என்பதோ இனிது; மற்று இன்னாதே,
மின் ஓரும் கண்ணாக, இடி என்னாய், பெயல் என்னாய், இன்னதோர் ஆரிடை ஈங்கு நீ வருவதை;
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது; மற்று இன்னாதே,
15
மணங்கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை;
இருள் உறழ் இருங் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது; மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி, ஒருவன்யான் என்னாது
20
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை;
அதனால்,
இரவில் வாரல்; ஐய! விரவுவீ
அகல் அறை வரிக்கும் சாரல்
பகலும் பெறுவை இவள் தடமென் தோளே."
25
புலியோடு போரிட்டு வென்ற தளர்ச்சியோடு, மலைச் சாரலில் படுத்து உறங்கும் யானை, கனவிலும் அது நிகழக் கண்டு வெருண்டெழுந்து தன் முன்னே, மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தை, அப்புலியாகவே கருதி, அதன் மீது பாய்ந்து அழித்துவிட்டு, சினம் ஆறிய பின்னர், தன் அறியாமை துணை