160
மா. இராசமாணிக்கனார்
"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க்கால்
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல்மதி
தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து,
5
ஈங்கே வருவாள் இவள் யார்கொல்? அங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றியாள்கொல்? வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல்? ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல்,
10
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள், ஈங்கு இதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து;
நல்லாய்! கேள்
ஆய்தூவி அனம் என, அணிமயில் பெடை எனத்
15
தூதுணம் புறவு எனத் துதைந்த நின் எழில் நலம்,
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய்! நிற்கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?
நுணங்குஅமைத் திரள் என, நுண்இழை அணைஎன,
முழங்குநீர்ப் புணைஏன, அமைந்த நின் தடமென் தோள்,
20
வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்!
நிற்கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகைஎன, முகம் செய்த குரும்பை எனப்
பெயல்துளி முகிழ் எனப் பெருத்த நின் இளமுலை
மயிர் வார்த்த வரிமுன்கை மடநல்லாய்! நிற்கண்டார்
25
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
எனவாங்கு,
பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாதொன்றும் வாய்வாளாது இறந்து ஈவாய்! கேள் இனி;
நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப்
30
போதர விட்ட நுமரும் தவறிலர்;
'நிறை அழி, கொல் யானை நீர்க்கு விட்டாங்குப்-