கலித்தொகை - குறிஞ்சிக் கலி
167
"தளைநெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை,
முளைநிமிர்ந்தவை போலும் முத்துக்கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண்ஏர்தண் ஏர் உருவின்,
துடுப்பெனப் புரையும் நின் திரண்டநேர் அரிமுன்கைச்
சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
5
விளையாட, அரிப்பெய்த அழகுஅமை புனைவினை
ஆய்சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அஞ்சில இயலும் நின்
பின்னுவிட்டு இருளிய ஐம்பால் கண்டு என்பால
என்னைவிட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி;
மருளி, யான் மருளுற, "இவன் உற்றது எவன்?” என்னும்
10
அருள் இலை இவட்டு என அயலார் நிற் பழிக்குங்கால்,
வைஎயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து, நீ,
தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?
உருள்இழாய்! ஒளிவாட, "இவன் உள்நோய் யாது?” என்னும்
அருள் இலை இவட்டு” என அயலார் நிற் பழிக்குங்கால்,
15
பொய்தல் மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பலர்க்குஈத்த பயம் பயக்கிற்பதோ?
ஆய்தொடி! "ஐது உயிர்த்து, 'இவன் உள்நோய் யாது?'
என்னும்
நோய்இலை இவட்டு" என நொதுமலர் பழிக்குங்கால்,
சிறுமுத்தனைப் பேணிச், சிறுசோறு மடுத்துநீ,
20
நறுநுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
எனவாங்கு,
அனையவை உளையவும், யான்நினக்கு உரைத்ததை
இனையநீ செய்தது உதவாயாயின், சேயிழாய்!
செய்ததன் பயன் பற்று விடாது;
25
நயம்பற்று விடின், இல்லை; நசைஇயோர் திறத்தே."
முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த அரும்புகளையுடையதும் நீர் மடத்திற்கு மேலே நீண்டு நிற்கும் இலைகளையுடையதுமாகிய தாமரையின் முளைகள் வளையமாக நிமிர்ந்து தோன்றுவது போல், முத்துக்கள் வைத்து ஆக்கிய, வளையல்களை அணிந்த, காந்தள் மலர் கொத்துக்களை ஒக்கும், முன்கையில், சிறந்த சிற்பத்தொழில் அமைந்த பானையும் பாவையும் கொண்டு