பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கல்வத்து நாயகம்

போற்றாடி யுற்றபொருள்
போலுமென்ற னுட்கமலம்
வீற்றாடி நல்லருளை
மேவுமஞர் தீரிரோ
ஈற்றாடி யுள்ளுதிரு
மீர்ஞ்சருகை யொத்திதயங்
காற்றாடி யாகாமற்
கல்வத்து நாயகமே!

பொட்டுண்ட வின்னுதலும்
பூணுண்ட மென்முலையும்
பட்டுண்ட சிற்றிடையும்
பாவையர்பாற் பார்த்துருகீத்
தட்டுண்டு தத்தளித்த
தாசனே னும்மருளிற்
கட்டுண்டு நிற்பேனோ
கல்வத்து நாயகமே!

அருங்காலி கன்றுவக்கு
மன்பினெழுந் தங்கனையார்
மருங்காவி யன்றவசை
மாறநெறி கூறீரோ
பொருங்காலி போன்றமடப்
புல்லரையுந் தாங்குமொரு
கருங்காலித் தூணிகர்த்தீர்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

23

தன்மவினை பல்கோடி
தட்டாமற் செய்தாலுஞ்
சென்மவினை தீருமுறை
தேரும்வகை காணேனே
வன்மவினை பூண்டமுழு
மாமடையர்க் குங்கொடிய
கன்மவினை நீத்தவெங்கள்
கல்வத்து நாயகமே!

ஊர்மதிக்கப் பேர்மதிக்க
வுற்றாருந் தான்மதிக்கப்
பார்மதிக்கப் பொய்புலைகள்
பண்ணிநின்ற பாவியெனை
ஆர்மதிக்கப் போகின்ற
ரையகோ வன்பினொடுங்
கார்மதிக்கக் காட்சிதருங்
கல்வத்து நாயகமே!

துள்ளுண்ட கைம்மறிபோற்
சூழ்ந்தெழுந்து தூயவர்தா
மொள்ளுண்ட நின்னருளை
மொய்த்துண்டு வாழ்ந்தார்யாள்
விள்ளுண்ட மாமுலையார்
வெங்காம வெள்ளமுண்டு
கள்ளுண்ட நாய்நிகர்த்தேன்
கல்வத்து நாயகமே!