பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கல்வத்து நாயகம்

மின்னிகர்த்த வாழ்வைநம்பி
வேண்டகிலா தும்மலர்த்தாட்
புன்னிகர்த்த சிற்றின்பப்
பூவையர்தாட் போற்றுகின்றேன்
என்னிகர்த்த பாவியினி
யெங்குமிலை யேற்றருள்வீர்
கன்னிகர்த்த பூம்புயத்தீர்
கவ்வத்து நாயகமே!

விண்பார்த்த நேமியென
வெட்டவெளி யுள்ளிருந்து
பண்பார்த்த சுத்தநிலை
பற்றிமகிழ் வெய்தாமல்
நண்பார்த்த வன்குடும்ப
நாடகத்தி லாடுகின்றேன்
கண்பார்த்துக் காப்பீரென்
கல்வத்து நாயகமே!

ஓலெடுத்த பாற்கடலி
லுண்டெழுந்த பைம்புயலின்
சாலெடுத்த மாரியெனத்
தண்ணளிதந் தாளீரோ
கோலெடுத்த தண்டலையுட்
கூண்டெழுந்த முக்கனித்தேன்
காலெடுத்த கிற்கரைவாழ்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

27

புண்ணெடுத்த வேல்வலவர்
போந்தடர்த்த போர்ப்பதுறில்
மண்ணெடுத்து வீசுநபி
மார்க்கநிலை கண்டோரே
பண்ணெடுத்த செந்தமிழ்சேர்
பாவெடுத்துப் போற்றுமெனைக்
கண்ணெடுத்துப் பார்த்தருள்வீர்
கல்வத்து நாயகமே!

வரைகண்ட பூண்முலையும்
வாள்விழியும் நீள்குழலும்
நிரைகண்ட வெண்ணகையும்
நேர்ந்தினைவே னுய்வேனோ
திரைகண்ட முத்தமிருள்
சித்தெழுந்தெல் செய்சீழக்
கரைகண்ட வாழ்வுடையீர்
கல்வத்து நாயகமே!

சுழலிலிடு பஞ்சென்னச்
சூழ்கமரிற் பாலென்னத்
தழலிலிடு நெய்யென்னத்
தத்தளித்து-மாளாதுந்
நிழலிலிடு தூளென்ன
நின்றுய்ய நன்றுவந்தேன்
கழலிலிடு தோலாக்கீர்
கல்வத்து நாயகமே!