பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

கல்வத்து நாயகம்

இளைப்பகற்றிப் பன்னாளு
மேய்ந்தபல நோயகற்றித்
தினைப்பகற்றி வேசையர்தஞ்
சிந்தனையுந் தானகற்றி
முளைப்பகற்றி வெம்பாச
முத்திநிலை கண்டிடவென்
களைப்பகற்றி யாளுமெங்கள்
கல்வத்து நாயகமே !

உய்வந்த முத்தர் குழா
முற்றுபர சிற்சபையின்
மெய்வந்த சான்றுரைத்து
மேவுபுகழ் பெற்றெழுந்து
நைவந்த தீகற்றி
நாடுசுத்த சேதனமாய்க்
கைவந்த மெய்க்குருவே
கல்வத்து நாயகமே !

வான்கண்ட வொள்ளொளிபோல்
மானிலத்து மேனிலத்தும்
ஊன்கண்ட சாத்திரத்தோ
டுள்ளுயிரு மானீரே
யான்கண்ட மெய்க்குருவே
பின்னருளே நல்லுணர்வே
கான்கண்ட கற்பகமே
கல்வத்து நாயகமே !


இன்னிசைப் பாமாலை

45

அந்தரத்தி லம்புவியி
லாயபல சீவர்தம்மைத்
தந்தரத்தி லாக்கவல்ல
சால்புமிக்க தக்கோரே
எந்தரத்தி லுள்ளசில;
வேழைகளு மின்னலறக்
கந்தரத்திற் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!

பாட்டாற்றி வந்தபல
பத்தர்மனப் பான்மைமுற்றுங்
கேட்டாற்றிக் காக்கவல்ல
கேண்மைமிக்க மேலோரே
தேட்டாற்றி வந்தவெனைச்
சேர்த்தருள்வீர் தீயபவக்
காட்டாற்றில் வீழ்த்தாமல்
கல்வத்து நாயகமே!

வான்கானப் பாதலமு
மண்டலமு மென்டிசையுந்
தான்காண வாய்ந்தபுகழ்
தந்துதவ வந்தோரே
நான்காண முப்பொழுதும்
நாடிவந்து நும்மலர்த்தாட்
கான் காணக் காட்டுகிற்பீர்
கல்வத்து நாயகமே!