இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
கல்வத்து நாயகம்
கூட்டுவிப்பீர் சன்மார்க்கங்
கொள்ளுவிப்பீ ரன்பொழுக்கம்
ஊட்டுவிப்பீர் பொன்னருளை
யோங்குவிப்பீ ரின்பநலம்
சூட்டுவிப்பீர் நும்மலர்த்தாள்
தோற்றுவிப்பீர் ஞானநெறி
காட்டுவிப்பீர் முத்திநிலை
கல்வத்து நாயகமே !
அடைத்தேற வைம்பொறியு
மைம்புலனு மைங்கோசந்
துடைத்தேற வைந்தவத்தை
தூர்த்தேறத் தூயதவம்
படைத்தேற வுண்மைநிலைப்
பற்றேறப் பாவியுநான்
கடைத்தேற வைப்பீரெங்
கல்வத்து நாயகமே !
க ல் வ த் து மா லை
ஆக்கியோர்;
மேலப்பாளையம்
காளை,ஹஸன் அலிப்புலவர்