பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கல்வத்து நாயகம்

துலைவைத்த நாவென்னச்
சூழ்ந்தபல ஞாயநிலைக்
குலைவைத்த பாவியெனை
யுள்ளுவந்து காவீரோ
மலைவைத்த தீபமொத்த
மெளலல்கெளமி யானவெங்கள்
கலைவைத்த மாமதியே
கல்வத்து நாயகமே!

பாராரு மூராரும்
பாவியெனப் பேசாமற்
சீராரு நுந்துணை த்தாள்
சென்னிமிகை சூடேனோ
ஏராரு நேமநிட்டை
யேந்தியற்று மாதவர்சூழ்
காராருங் கையுடையீர்
கல்வத்து நாயகமே!

மண்ணொளியும் பொன்னொளியும்
வாய்த்தபல மாமணியின்
றண்ணொளியு நுங்கமலத்
தாளொளிக்கோ வொவ்வாவே
விண்ணொளியு முற்றபல
வேற்றொளியு மன்பருளக்
கண்ணொளியுங் காண்பருமெங்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

21

பொற்பகத்தைக் கட்டுணையைப்
போற்றுமுயர் நாவகத்தை
யெற்பகத்தை நும்மடிக்கே
யீடாக வையேனோ
அற்பகத்தை யர்ப்பணமென்
றற்பகலு மாக்குநர்க்கோர்
கற்பகத்தை யொத்தவெங்கள்
கல்வத்து நாயகமே!

வரையேற்ற மென்முலையார்
மாயவலைக் குள்ளாகி
விரையேற்ற நுங்கமல
மெல்லடிக்கீழ் நில்லாமல்
கரையேற்ற வெம்பாசச்
சாகரத்து ளாழுகின்றேன்
கரையேற்ற லாகாதோ
கல்வத்து நாயகமே!

அடக்கமுடி யாவாசை
யாறிழுக்கப் பேறிழந்து
கிடக்கமுடி யாதுழன்றேன்
கீழ்மைகரு மாயையெனும்
நடக்கமுடி யாச்சுமையு
நான்சுமந்தேன் நாடிலிவை
கடக்கமுடி யாவோவெங்
கல்வத்து நாயகமே!