பக்கம்:களத்துமேடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


கிராமத்துச் சூழ்நிலையில் விளைந்தது இந்தக் “களத்து மேடு” கதை.

கதையைப் படிக்க ஆரம்பித்தால் நாமும் களத்து மேடு சென்று கண்விரியப் பார்ப்போம்.

கதையின் நடு நாயகி தைலம்மை.
அவள் தீ! அவளே நீர்!

அவள் பூவிதழ் விலக்கி, பொன் மலர் தூவினால் அங்கே கனலின் கொழுந்து சிரிக்கும் !

பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் கதிரையும் கதிர் மணியையும் புதுமையாகப் புனைந்து நம்மையெல்லாம் அழைக்கிறார் சக்தியின் விதியைக் காண்பதற்கு !

படியுங்கள்; அருமையான விளைவிற்கு வித்திட்டுப் பயிர் படைத்த ஆசிரியரைப் பாராட்டி நன்றியுடன் மகிழ்வோம்.

காரைக்குடி
30-12.1985

வீர. சிவராமன்
செல்வி பதிப்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/6&oldid=1386177" இலிருந்து மீள்விக்கப்பட்டது