இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை
- கிராமத்துச் சூழ்நிலையில் விளைந்தது இந்தக் “களத்து மேடு” கதை.
- கதையைப் படிக்க ஆரம்பித்தால் நாமும் களத்து மேடு சென்று கண்விரியப் பார்ப்போம்.
- கதையின் நடு நாயகி தைலம்மை.
- அவள் தீ! அவளே நீர்!
- கதையின் நடு நாயகி தைலம்மை.
- அவள் பூவிதழ் விலக்கி, பொன் மலர் தூவினால் அங்கே கனலின் கொழுந்து சிரிக்கும் !
- பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் கதிரையும் கதிர் மணியையும் புதுமையாகப் புனைந்து நம்மையெல்லாம் அழைக்கிறார் சக்தியின் விதியைக் காண்பதற்கு !
- படியுங்கள்; அருமையான விளைவிற்கு வித்திட்டுப் பயிர் படைத்த ஆசிரியரைப் பாராட்டி நன்றியுடன் மகிழ்வோம்.
காரைக்குடி
30-12.1985
வீர. சிவராமன்
செல்வி பதிப்பகம்