பக்கம்:களத்துமேடு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

75

 கிடந்தன. அவற்றைப் பதனமாக எடுத்தாள். கைவிரல்களைப் படியவைத்து, தன் தந்தையின் கால்களின் அடிப்பாதங்களைத் தேய்த்துவிட்டாள். அடுத்த வினாடி,அவளுள் ஏன் அப்படிப்பட்ட மின் இயக்கம் தோன்றியது?-சற்றுமுன் வாழைத் தண்டாக ஈரம் பாய்ந்து சில்லிட்டிருந்த கால்கள் இப்போது லேசாகக் சலனம் பெற்ற மாதிரி அவளுக்குத் தோன்றியது.

"ஒங்களைத்தானே?...மேலக் குடியிருப்புக்காரகளே, சத்தெ இங்கிட்டாலே வரமாட்டீகளா? வந்து எங்கப்பாரை அழுத்தமாப் பாருங்களேன்!" என்று மென்மையின் நைப்புடன் அலட்டினாள். அலட்டிய சூட்டுடனேயே, தன் தந்தையின் விழிகளை நோக்கினாள். சவத்தின் விழிகளாகவே அச்சுறுத்தின. அவ்விழிகள் இப்போது அவ்வளவு பயம் காட்டுவதாக அவளுக்குத் தோன்றவில்லை.

அதற்குள் மேலக்குடியிருப்பு சுப்பிரமணிய தேவர் வந்தார். வந்து சேர்வையை நோக்கினார். வலது கை முன் விரலை நாசியின் ஊடாக நீட்டினார். "மூச்சு பட்டும்படாமயும் ஊடாடுறாப்பிலே எம்மனசுக்கு ஓடுது தங்கச்சி,’’ என்று பைய வெளியிட்டார்.

"அல்லாம் ஆத்தா போடுற பிச்சையைப் பொறுத்தது!’’ என்று தெம்புடன் பேசிக்கொண்டே எழுந்தாள் தைலம்மை தலைமயிர்க் கற்றையைத் தட்டிக் கோதி முடிந்து கொண்டாள். சேர்வையை மீண்டும் பார்த்துக் கண்களைத் துடைத்துக்கொண்டாள். விசும்பல் தொடராமல் சமாளித்தாள். சேலை முகத்தலைப்பை பின் முதுகுக்கு வாளிப்பாக இழுத்து விட்டுக்கொண்டாள். நீம்பல் விட்டிருந்த ரவிக்கையைச் செம்மை செய்தாள். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்ட மாதிரியே அவளுக்கு ஒரு சிந்தனை. ஆனால் அவள் மீண்டும் மண்ணை-களத்துமேட்டுப் பொட்டலைப்-பார்த்த போது, அவள் மேனி தீயிடை முல்லையாகப் பொசுங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/82&oldid=1386132" இலிருந்து மீள்விக்கப்பட்டது