பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

மயிலை சீனி வேங்கடசாமி

அவன் இறந்தபோது, அமைச்சர்கள் பட்டத்து யானையின் கண்ணைத் துணியினால் கட்டி மறைத்து நகரத்தில் போகவிட்டனர். அந்த யானை யாரைத் தன் மேல் ஏற்றிக் கொண்டு வருகிறதோ அவரை அரசனாக்கி பட்டம் கட்டுவது அக்காலத்து மரபு. நகர வீதிகளில் சென்ற யானை சொக்கநாதர் ஆலையத்தருகில் நின்று கொண்டிருந்த மூத்தியாரை தன் மேல் ஏற்றிக்கொண்டு சென்றது. அமைச்சர்கள் அவருக்கு முடிசூட்டி, அரசனாக்கத் தொடங்கினார்கள். மூர்த்தியார் தமக்கு பொன்முடி வேண்டாம் என்று மறுத்துவிடார். சிவனடியார் ஆகையால், அவர் திருநீற்றையும் உருத்திராக்கத்தையும் சடை முடியையும் அளித்து பட்டங்கட்டப் பெற்றார். அதனால் அவர்'மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்' என்று கூறப்பட்டார். இவருடைய வரலாற்றை பெரிய புராணத்தில் காணலாம். (மூர்த்திநாயனார் புராணம்) மூர்த்தியார் எத்தனையாண்டுகள் அரசாண்டார், அவருக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி மீண்டும் எப்படி மதுரையில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது நிகழ்ந்த காலமும் தெரியவில்லை.

கூற்றனார்

சோழ நாட்டை யரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும் கூற்றுவநாயனார் என்றுங் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் அறிகிறோம். (கூற்றுவநாயனார் புராணம்) ' 'ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தை கோன் அடியேன்' என்று சுதந்தரமூர்த்திதாயனார் திருத்தொண்டத் தொகையில் இவரைக் கூறுகிறார். இவர் களப்பாளன் (களப்பிரன்) குலத்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார்.[1]

நாதன் திருவடியே முடியாகக் கலித்து நல்ல
போதங் கருத்திற் பொதித்தமை யாலதுகை கொடுப்ப
ஓதந்தரு வியஞான மெல்லாம் ஒருகோலின் வைத்தான் கோதை தெடுவேற் களப்பாள ளாகிய கூற்றுவனே

களப்பிர அரசர்கள் பொதுவாகச் சைனசமயத்தவர் என்றாலும், அவர் குலத்தைச் சேர்ந்த கூற்றுவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சோழ நாட்டிலிருந்த இவர், சோழ் அரசர்களுடைய முடியைத் தரித்து அரசாள வேண்டும் என்று விரும்பினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தார்கள். அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடி ஒன்று ஒழிய அரசர் திருவெல்லாம்' உடையராக இருந்த கூற்றுவர், சோழ அரசருடைய பழைய முடியைத் தரித்து அரசாள விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியை வைத்திருந்த தில்லைவாழந்தணர்களை அணுகி அந்த முடியைக் கொண்டு தனக்கு முடி சூட்டும்படி கேட்டார். அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு


  1. திருத் தொண்டர் திருவந்தாதி 47