பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

எலிவிருத்தம், கிளிவிருத்தம்

கி.பி.7-ம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய தேவாரப் பதிகத்தில் எலிவிருத்தம், கிளிவிருத்தம் என்னும் இரண்டு நூல்களைக் கூறுகிறார். "கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர் 'எலியின்தொழில், பாட்டு மெய்கொலிப் பக்கமே செலுத்தும்"[1] நரிவிருத்தம் போன்று இந்த நூல்களும் சமண சமய நூல்களே. இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்து போயின. இந்நூல் செய்யுட்களில் கலித்துறைச் செய்யுட்களும் பயின்றுள்ளன என்பது தெரிகின்றது. "குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித்துறைகளும் உளவாம்" என்று வீரசோழிய உரையாசிரியர் எழுதியுள்ளார்.

விளக்கத்தார் கூத்து.

இது கூத்து நூல். இதைச் செய்தவர் விளக்கத்தார் (விளக்கத்தனார்) என்னும் புலவர். இந்த நூல் பிற்காலத்தில் மறைந்து விட்டது. இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் தம்முடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.[2] இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் இவர் அச்சுதன் என்னும் களப்பிர அரசனை வாழ்த்துகிறார்.

அடுதிறல் ஒருவ நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழத் கொடும்பூண் பகட்டெழு மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் பேர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவே னெனவே

இதனால் இந்த நூல் களப்பிர அரசன் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இந்த நூலின் வரலாற்றை 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்னும் புத்தகத்தில் காண்க.

பெருங்கதை

பெருங்கதை என்னும் இந்த நூலுக்கு 'மாக்கதை' என்றும் 'உதயணன் கதை' என்றும் சுருக்கமாகக் 'கதை' என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்கு நாட்டில் வாழ்த்திருந்த கொங்குவேள். இதனால் இதனைக் 'கொங்குவேள் மாக்கதை' என்றும் கூறுவர். கொங்குவேள் கொங்கு நாட்டு விசயமங்கலம் என்றும் ஊரில் இருந்தவர். பெருங்கதையின்


  1. திருவாசகம் 5
  2. இணைப்பு 1ல் முதல் செய்யுள் காண்க