பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

I 2

போடாமல் இருக்காதாக்கும்! ஊருக்காக வேண்டி, அப்பனும் மகனும் கீழே விழுந்திட்டு, மீசையிலே மண்ணு ஒட்டலேண்ணு இட்டுக்கட்டிப் பேச வேண்டிய இக்கட்டிலே மாட்டிக்கிட்டு முழிக்கச் சோதிப்பு நேர்ந்தாச்சு! இல்லையாப்பா, வீரமணி?’’

மெளனப் பிண்டமென உருமாறி, உருக் கொண்டு, உருக்காட்டும் சோதனைப் பொறுப்பு இச்சமயம் வீரமணியின் தலையிலே சோதனையாய் விடிந்தது போலும்!

ஆனல்......

வீரமணியின் மெளனத்தை-விடுகதைப் புதி ரென விளங்கிய மெளனத்தைக் கோழைத்தனம் என்று கருதியோ, அல்லது அசட்டுத்தனம் என்று நினைத்தோ, அல்லது அகம்பாவத்தனம் என்று எண்ணியோ, பெரியவர் ஆதிமூலம் அட்டகாசமாக வும் ஆவேசமாகவும் நிர்த்தாட்சண்யமாகவும் சிரித் தார்; சிரித்தார்; அப்படிச் சிரித்தார்!

7. பாசமெனும் பூவிலங்கு

ஆதிமூலத்தேவர் தமது சி ல ட் டு ர் ப் பயணத்தை ரத்துச் செய்து விட்டார்!

வீரமணி சிலையானுன்! தன் தந்தை-அன்பிற்கும் பாசத்துக்கும் உகந்த தந்தை பொங்கு மாங்கட லாக உருமாறி, உருக்கொண்டு உருக்காட்டி, நிர்த் தாட்சண்யமாகவும் அட்டகாசமாகவும் ஆவேச