பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

夏品台

யோகாசனம் பயில்பவர் மாதிரி உட்கார்ந்தார் தேவர். அப்புறம் ஒரு மாத்திரைப் பொழுது இடை வீடு கொடுத்தபின், அடுத்த தடவையாகவும் தொண் டையைக் கனத்துக் கொள்ளத் தவறினர் இல்லை.

தொண்டையை அடைத்து விடாமல் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையில், அதாவது வரு

முன் காப்பதில் - காத்துக் கொள்வதில் அவர் முடிந்த அளவுக்குக் கண்காணிப்புடன் இருப்பார்,

நட்சத்திரத்தோடு நட்சத்திரமாகக் கலந்து சிவப்பு விளக்கைப் புள்ளியாக்கிக் கொண்டே பறந்

தோடிய ஆகாயக் கப்பலை அந்த நாளையிலே ரசித் தது போலவே இப்போதும் ரசித்தான் வீரமணி.

எங்கேயோ ஆந்தை கத்தியது. "வீரமணி, என்ருர் தேவர்.

'சொல்லுங்க, அப்பா!' என்ருன் தேவரின் கறிவேப்பிலேக் கொழுந்து.

தேவர் பேசத் தொடங் கிவிட்டார்:

'தம்பி, என்ளுேட ஆஸ்திக்கு ஒரு பிள்ளை என்கிறதிலே சட்டம்தான் வாய் பேசலாம். ஆன. நீ என்ளுேட ஆசைக்கும் ஒரு பிள்ளையாக்கும். இந்த உண்மையானது அண்ணைக்கும் பொய்யாகல்லே! இண்ணைக்கும் பொய்யாகல்லே! நான் பொய். பேசத் தேவை கிடையாதுதான்! கண்ணிலே வச்சு இமையினவே மூடி அந்தக் காலத்திலே நானும் உன் ஆத்தாளும் உன்னே வளர்த்தோம். இந்தக் காலத் திலே நான் ஒண்டியாய் உன்னை வளர்த்திருக்கேன்.