பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140

நான். ஆணுல்...?’ என்று கூறி விட்டுப் பேச்சை அந்தரத்தில் நிறுத்தின்ை அவன்.

ஆதிமூலம் திகைத்தார். 'ஏன் நிறுத்திப்புட்டே? பேசு வீரமணி, பேசு!" என்று தூண்டிவிட்டார்.

வீரமணி விநயமான முறுவலுடன், 'நம்ப வீட்டுக்குச் சீதேவி ஒருத்தி என் மூலமாக வந்து சேர்ந்திட்டால் மட்டும், நம்ப வீட்டிலே உடனேயே சீதேவி பூத்துக் குலுங்கிட முடியுங்களா?’ என்று கேட்டான்.

சீண்டி விட்டால், நல்ல பாம்பு படமெடுக்கும்.

"ஏன் பூத்துக் குலுங்க மாட்டாளாம் சீதேவி! நல்ல நேரம் கூடி வந்தா நல்ல நம்பிக்கையும்கைகூடி வராதா? நீயும் உழைப்பாய்; நானும் உழைப்பேன். நம்மோட வீடு தேடி வரப் போற சீதேவியும் நம்ம ளோட சேர்ந்து உழைப்பாள. தொட்டது துலங் கும். மண்ண்ேத் தொட்டால் பொன் ஆகும். உன்னுேட விவசாயப் படிப்பு துணை இருக்கும்: அரசாங்கத்தோட உதவி ஒத்தாசை கை கொடுக் கும். உன் ஆத்தா வள்ளியம்மையும் கட்டாயம் வாழ்த்துவா. பின்னே, நம்ப தொல்லேகளெல்லாம் விடிஞ்சு, விடி வெள்ளி முளைக்கிறதுக்கு எந்நேரமாகு மாம்? இந்தக் குறுவைப் பட்டமும் தாளடி விளைச்சலும் அமோக மகசூல் கொடுத்தாச்சுன்னு, அப்புறம், நம்ப தலை மேலே பயங்கரச் சுமையாய் குந்தி, கொடுமையாகக் கிட்டி கட்டி அழுத்தி தசுக்கிக் கிட்டிருக்கிற கடன் கப்பி சாடாவையும்