பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

I of 3

போற்றிய அவன், உட் புறத்தில் பார்வையை வீசிய போது, அங்கங்கே பல் இளித்த மண் சுவர்களையும் வெடிப்புக்களையும் சிதிலங்களையும் காணக் காண, அவனுள் ஒர் உறுத்தல் மாமூல் மாருமல் ஏற்படவே செய்தது. வீட்டின் உட்புறங்களையும் செப்பனிட்டுச் சீர்ப்படுத்தினுல்தான், வீட்டின் வெளியழகுக்குச் சமதையான-உண்மையான அந்தஸ்து ஏற்பட முடியும் என்ற யதார்த்த நிலை அவனுக்கு விளங்கா மல் இல்லை. ஆனால், வழிதான் மட்டுப்படவில்லை. தலையை அடகு வைத்தாவது முதலில் அம்மான் கடனைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அப்போதுதான், தலை முறை தத்துவமாகக் கட்டிக் காக்கப்பட்டு வரும் இந்தக் கண்டிச் சீமைக்காரர் மச்சு வீட்டின் மானம் மரியாதை எல்லாம் நிலைக் கும்! நிறக்கும்! மணக்கும்!

'வீரமணி அண்ணு! தலை முழுகிப்புட்டீங்களா?’’ "இனித்தான் தலை முழுகனும், மாணிக்கம்!' "கிளம்புவமா?' - -

  • * ஒ! - - மேற்காலே மகமாயி ஊரணிக்குப் போவ லாமா? இல்லாட்டி, கிழக்கிட்டு முளைக் கொட்டுக் கம்மாய்க்கு நாடுவமா?’’ -

“உன் இஷ்டம், தம்பி.' * , 'அப்படீங்களா? மேற்காலவே பறிவோம். அப்பத்தான் உங்களுக்குக் கிளுகிளுப்பு மூச்சுக் தாட்டும்: . . . . . . . . . . . .