பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

夏苏莎

யென்ருல், சோதிப்பு எதுவுமே அவனுக்கு ஏற்பட்டு விடவில்லை யென்று பொருளா? பொருள் புரியாக் கவிதை போலவா, அவன் தந்தை அவனுடைய திருமணத்தைக் குறித்த அந்த முடிவை இரவிலே அவனிடம் வெளியிட்டார்! அவனுடைய குறுநகை ஒட்டிக்கு ரெட்டி'யாகவே தழைத்தது. நீராடப் போகும் பாவனை பில் சென்ருல் வழியில், அவனுடைய 'கனவுக் கிளி'யின் தேவ தரிசனம் கிடைக்கவே செய்யும் என்கிற தன்னம்பிக்கைதான் அவனது அகமகிழ்வுக்குக் காரணமாக இருக்க வேண்டும்.

களத்துமேடு வழி மறித்தது. ‘அண்ணுச்சி, உங்களோட களத்து மேட்டுக்குத் தென் வடக்காலே ஒரு மொட்டை வாகை மரம் தண்டமாய் நிற்குதுங்களே, அதை வெட்டியெறிஞ் சாக்க, இடம் போரடிக்கவும் நெல் தூற்றவும் இன்னம் கொஞ்சம் சிலாவத்தாய் இருக்காதுங் களா!' என்று கருத்துத் தெரிவித்தான் நண்பன்.

“அந்தப் பட்ட மரம் எங்க அம்மனுக்குச் சொந்தம். எங்க காணியாட்சி இடத்தை அடுத்து அவருக்கு உண்டான இடம் ஆரம்பமாகுதாம். எங்க குடும்பத்துக்கு முடிஞ்ச மட்டும் இடசங்கம் செய்ய வேணும் என்கிறது அவரோட வீம்பு! அந்தத் தூரடியைச் சாய்ச்சு எடுத்துக்கிட்டுப் போன லும், மூணு நாளேக்கு உலை கொதிக்கும். மா ட் டே ன் னு சொல்லிட்டாராம்! வயிறு நிரம்பினால், சோற்றுப் பானையை மூடாத ஆசாமி