பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188

மிச்சம் மீதி வைக்கோல் எல்லாம் அதன் வாய்க்கு எட்ட முடியாமல் போயிற்று. வெள்ளைக் காலில் முடிச்சுப் போட்டுப் பிணைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காளை அவ்வளவு லகுவில் பிடிகயிற்றை அறுத்துக் கோண்டு விடுதலை பெற்று விட முடியுமா? இல்லை, அவ்வாறு விடுதலே அளிக்கத் தான் ஊர் நாட்டாண் மைக்காரர் அவ்வளவு லேசில் இளகி விடுவாரா?ஒரே எட்டில் பாய்ந்தார் பெரியவர். பசி தூண்டப் பெற்ற நிலையிலே, வாய்க்கு எட்டிய வைக்கோற் பிரியை மென்று அசை போட்டதோடு பசுவாகக் காட்சியளித்த வெள்ளைக் காளையின் காலடியில் கிடந்த வைக்கோல் சாடா' வையும் அப்படியே குண்டுக் கட்டாகக் கூட்டிக் குவித்து அள்ளிக் கொண்டு அதே பாய்ச்சலோடு மறுகி தம்முடைய பகக்களுக்கும் காளைகளுக்கும் தூவிவிட்டுக் கையைத் துடைத்துக் கொண்டு, பிறகு தமது கருக்கரிவாள் மீசையையும் முறுக்கி விட்டுக் கொள்ளலாஞர்.

வீரமணிக்கு அப்பாவின் செயல் அவமானத்தை மட்டும் துர ண ட வி ல் லே; ஆத்திரத்தையும் தூண்டவே செய்தது. அப்பா, நம்மளோட கோபதாபத்தையெல்லாம் ஒரு பாவமும் அறியாத இந்த வாயில்லாச் சீவன் கிட்டவா காட்டு வீங்க? உங்கசடனைக்கும் ஆத்திரத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர் நீங்க அடிக்கடி குத்திக் காட்டுற மாதிரி என்னேட அருமை அம்மான்தான்: அதொப்ப, அம்மானேட சங்கடத்துக்கும்சாவாலுக் கும் பதில் சொல்லித் தீரவேண்டிய விதி உங்களுக்கு உண்டு. உங்க ரெண்டு பேருக்கும் ஊடாலே நீறு