பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

2{}星

உனக்கு ஆத்தாளா இருக்கிருள்?' பெரியவரின் குரல் கம்மத் தொடங்கிற்று.

வீரமணி அப்பாவையே வெறிக்க வெறிக்கப் பார்த்த வண்ணம், வண்ணப் பூக்கோலமெனக் கோல நகை புரிந்தான். ஆத்தா இருந்திருந்தால், உங்களை மாதிரி என்னேடி மனச் சம்மதம் கேட்காமல், என் வரை ஊர் யேர் தெரியாத சிலட்டுர்ப் பெண் பவளத்தைப் பேசி முடித் திருப்பாங்களா?' என்று நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு நெஞ்சை அடைத்தது. பாசத்தின் பிரிவு அவன் கண் கடையில் சுடுநீரைக் கூட்டியது. தன் கண் கலங்கக் கண்டால், அப்பாவின் கண்களும் கலங்கத் தொடங்கும். சமாளித்துக் கொள்ள வேண்டியவன் ஆனன். தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாமல், வேண்டா வெறுப்போடு அவசரமாக எழுந்தான். எழுந்த அவசரத்தில் அவன் கட்டியிருந்த வேட்டியில் கட்டியிருந்த மடி அவிழ்ந்து, உடனே மடியிலிருந்த வைரச் சிமிக்கிகள் இரண்டும் ஒளியின் மிதப்பில் அமரிக்கையாக நழுவி விழுந்து கண் சிமிட்டின. திருடனுக்குத் தேள் கொட்டினுற் போன்று ஆகி விட்டது வீரமணியின்

ஆதிமூலம் மூக்கின் முனையில் விரலை வைத்

தார். 'அடடே, ராமையாத் தேவன் பறி. கொடுத்து வாயிலேயும் வயிற்றிலேயும் அடிச் கிட்டுப் பறிஞ்சதெல்லாம் இந்த ஜோடி வைரச் சிமிக்கிக்குத்தான?' என்று பல்லெல்லாம் தெரியக்