பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

2 i ()

வீரமணியை எங்கெங்கெல்லாமோ வழி காட்டி, வழி நடத்திச் சென்றிருக்கக்கூடும். அவனுடைய தளர்ந்த நெஞ்சம் மலரத் துடித்துக் கொண்டே யிருந்தது. கைக்கு மெய்யாகக் காட்சி தந்த வைரச் சிமிக்கிகளை உரியவளிடம் ஒப்படைத்து விட வேண் டியது நாணயம் கூடிய பண்பாகும் என்று அவன் கருதினன். ஆனால், எப்படி ஒப்படைப்பது, என்ன காரணம் காட்டி ஒப்படைப்பது என்பது இப்போது அவனுடைய மண்டையைக் குடைந்த பிரச்சினை யாக ஆகிவிட்டது. அன்ருெருநாள், தான் சுவைத்து எச்சில்படுத்திய முட்டைத் தோசையை அன்னம் கவைத்துத் தின்ற நடப்பு அவனுக்குப் புதிய வல்ல மையைக் கொடுத்தது. தனக்குச் சிலட்டுரில் அப்பா சம்பந்தம் மு. டி த்தி ரு ந் த ஏமாற்றத்தின் பூச் சாண்டித்தனத்தைப் பற்றிக் கருதவே அவனுடைய அந்தரங்க உள்ளம் கூசிய நிலையில், உள்ளங்கையி லிருந்த வைரச்சிமிக்கிகளை ஒன்று சேர்த்துப் பையப் பைய மேலே உயர்த்திக்காட்டினன் அவன். உடைய வளுக்கு உடைமை பூண்ட உடைமையை ஒப்படைப் பதற்கு அப்பாவின் ஒப்புதலோ அனுமதியோ தேவையில்லை என்பதை அவன், அறிவு பூர்வமாக மட்டுமின்றி, உணர்வு பூர்வமாகவும் அறிந்திருந் தான். w 袭

"நான் வரட்டுங்களா, அத்தான்?' என்று விடை கேட்டாள் அன்னம்.

'விசேஷம் ஏதாவது உண்டா, அன்னம்?"