பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

2 ()

அவள் தலை மறைந்ததோ இல்லையோ, கடை எடுபிடிப்பயல் தலைதெறிக்க ஒடி வந்து, அந்தப் 'புண்ணியவதி யின் 'திருப்பாதங்கள் பட்டிருந்த இடத்திலே வள்ளிசாக ஒரு சருவம் தண்ணிரைச் சாய்த்து முடித்த பிற்பாடுதான், நல்ல மூச்சு விட லானுன்.

கரவொலி வெடிக்கக் கேட்பானேன்?

வீரமணி அமைதியடைந்தான்; நன்றியறிவு துலங்க, ஞானசீலனைப் பார்த்தான். 'பரவாயில்லை! -சமூக நீதிக்குப் பிழைக்கத் தெரிஞ்சிட்டுது! பாவி செங்கமலமே சதம்னு மனப்பால் குடிச்சுத் தடம் புரண்டு திரிகிற என் அம்மான் ராமையா தேவருக்கு நானும் இந்த ஊர்நாடும் பாடம் படிச்சுக் கொடுக் "கிறதுக்கு உண்டான கெடு, கிட்டே நெருங்கிக் கிட்டே இருக்கிற துப்பை அவர் எப்படி அறிவார்? பாவம்' நெடுமூச்சுப் புறப்பட, அவன் புறப்பட் டான். எதிர் நீச்சல் போடப் பழகியவனை எதிர் வெய்யில் என்ன செய்ய முடியும்?

ஆடிப் பட்டத்துக்குப் பட்டம் சூட்ட மண்ணும் மண்ணை நம்பின மக்களும், மக்களை நம்பிய மாடு களும் சுதாரிப்போடும் சுள்ளாப்போடும் தயாராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

தேசப் பாதுகாப்பிலே கடமையாற்றிப் பங்கு பற்றிய அனைத்துக் கட்சித் தொண்டர்களே நினை வூட்டும் வகையில் குப்பை வண்டிகள் சாலை நெடுகி லும் போய்க் கொண்டிருக்கின்றன!