பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

33 (;

என்று அன்பின் நெகிழ்ச்சியுடன் சல்லாபமாகச் சொல்விக் கொண்டே, இதயத்தின் காதற் துடிப் புடன் காதற் பெண்ணின் கடைக்கண் பணியினை அனுபவிக்க, மெல்ல மெல்வ - மெள்ள மெள்ள நெருங்கிளுன் ,

அன்னம் தானத்தின் தங்கப் பதுமையாக தின்ருள்.

'அன்னம், உன் வைரச் சிமிக்கிகளே அம்மான் மடியிலே வச்சுக் கிட்டு இருந்திருக்காங்க போலே! வெள்ளை விசயமாக அவர் இங்கிட்டு வந்த சமயத் திலே, அந்த வைரச் சிமிக்கிகள் மடியிலேயிருந்து தழுவி எங்க வீட்டுத் திட்டி வாசல் புறத்திலே விழுந்து கிடந்திச்சு. நான் எடுத்து வச்சிருந்தேன். இந்தா' என்று ஒர் அமைதியின் நிறைவோடு பேசிவிட்டு, வைரச் சிகிக்கிகளைக் கை விரல்களிலே ஏந்தி நீட்டினுன் வீரமணி.

"இந்த வைரச் சிமிக்கிகள் என்னுடையது இல்லீங்களே? ஒரு வேளை, இதுகளை என் கண்ணுவத் துக்காக அப்பா செஞ்சிருந்தாலும், அதைப் பற்றி அப்பா என்கிட்டே கட்டாயம் சொல்வியிருப்பாங் களே? இது என்ன ஒரே பூடகமான சமாச்சாரமாக இருக்குதுங்களே, அத்தான்; அப்பா மடியிலே யிருந்து இந்த வைரச் சிமிக்கிகள் விழுந்திருந்தால், அந்த ரகசியம் அப்பாவைக் கேட்டால்தான் விளங்கும்! ஆமாங்க, அத்தான்: '

அன்னம் திகைப்பும் மலேப்பும் மீதுாற நின்றுள். அப்போது: . -