பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அந்தரங்கமும் இருந்தது. ஒட்டும் இரு உள்ளங் களும் ஒட்டிக் கொண்டிருந்த அந்தத் தனிமையை ஒரு சொந்தம் வாழ்த்தியது. -

மேலே, நட்சத்திரக் குழந்தைகள் கண்ணு மூச்சி விளையாட்டிற்குப் புள்ளி வைத்து விட்டு, நாணக் குதுரகலமும் நமட்டுச் சிரிப்பும் குலுங்கக் கீழே பார்த்தன.

"அத்தான்,' என்று அன்பு பாராட்டி விளித் தாள் அன்னக்கொடி, நேசம் அன்ன நடை பயின்றது; பாசம் கொடியெனத் துவண்டிது; ஆசை கிளியாகப் பேசியது. முகப்புத் தோட்டத் தில் நிலவில் மயங்கி நின்ற ரத்தப் பூக்கள் அவளை என்னவோ செய்தன: -

முறைப்பெண்ணே முறையான காதல் உணர் வோடு ஏறிட்டுப் பார்த்தான் வீரமணி. உள்ளங் கைக்கு உள்ளடக்கம் கற்பித்திருந்த வைரச் சிமிக்கி களின் கனம் நெஞ்சைச் சுமைதாங்கியாக்கி ஏறிக் குந்த, அவன் அவளைப் பார்த்த பார்வையில் ஆழம் மட்டுமல்லாமல், ஆதங்கமும் நிழலாடியது, மாமன் மகளிடம் சற்று முன்பு வைரச் சிமிக்கிகளை ஏந்திப் பிடித்துக் காண்பித்ததைக் கண்ட அப்பாவும் அம்மானும் தன்னே அழைத்த மாறுபட்ட குரல் களையும் வேறுபட்ட சுருதிகளின் மாற்றங்களையும் அவன் இப்போதும் நினைத்துப் பார்க்கவே நாட்டம் கொண்டான். நிலவுப் பூக்களின் மணம் கமழும் வெளிச்சத்தின் ஆரோக்கியமான இன்பச் சூழலில் நின்றவன், இருட்டின் பயங்கரப் புதிர்ச் சிரிப்பின்