பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

236

களைக் கண்டதும், முக்காலறுப்பு இதுங்க ரெண்டும் உன்னுடையதாகவே இருக்கும்னும் இதுங்களை உன் அப்பா தான் தவறவிட்டுப்புட்டுப் பாய்ஞ்சிருக்க வேணும்னும் யோசிச்சேன். நம்பினேன். அதுக்குத் தக்கனை, அம்மான் வந்ததும் வாரததுமாய் என் ஆசைப்பொண்ணு அன்னத்துக் கோசரம் ஆசாரி கிட்டே செஞ்ச புது வைரச்சிமிக்கிகள் ரெண்டை யும் காணலையே? அப்படின்னு ஆத்திரம் பொங்க அழமாட்டாத குறையாகச் சேதி சொன்னங்க. இதுக்குப் பிறகாலே நடந்த நடப்பு, உங்க வெள்ளைக் காளையோட கதை கணக்கிலே முன்னடியான் சாமியாய் ஒதுங்கிக்கிடட்டும்!...... # *

வீரமணிக்கு இருமல் வரவே, இருமினன். காட்டமான புகைச்சல் இருமல். பிறகு மறுபடி தொடர்ந்தான்: ‘'அன்னம், இந்த வைரச்சிமிக்கி சம்பந்தமான சமாசாரம் எதுவுமே உனக்குத் தெரியாதின்னு எனக்குத் தோணுது. அப்படி பால்ை, அம்மான்காரருக்கும் இந்த வைரச்சிமிக்கி களுக்கும் ஊடாலே ஏதோ ஒரு கமுக்கம்'-ரகசியம் தந்திக்கிட்டு இருக்க வேணும்! அப்படின்ன, இத்த வைரச்சிமிக்கிகளை அம்மான் வேறே யாருக்கா கவோதான் அவசரமாகச் செஞ்சிருக்கவேணும். நீ என்ன கருதுறே, அன்னம்?” -

தொட்ட இருமல் தொடர் சேர்ந்தது.

விட்ட பெருமூச்சு விடை கேட்டது.

அன்னக்கொடி அழுகையும் சிரிப்பும் அற்ற திலைக்கு ஆளாளுள் ஆட்பட்டாள். எதையோ