பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

2 36

வாங்கிப் பதுங்கினர். பின்னர் கையிலிருந்த தன்னுடைய ஒரேயொரு வைரச் சிமிக்கியைப் பரிதாபமாகப் பார்த்தவாறு, அதை இடுப்பு மடியில் செருகிக் கட்டிக் கொண்டார். மேலேயும் ேேழயும் மிரள மிரள விழித்துப் பார்த்தார். மறு வினுடியில் பதுங்கிப் பாயும் வெம்புலியாக உருக் கொண்டு ஆதிமூலத் தேவர் மீது ஒரே பாய்ச்சலாக --காட்டுப் பாய்ச்சலாகப் பாய்ந்தார் ராமையாத் தேவர்!

அப்பொழு ஜீ !

கண்களில் விளக்கெண்ணெய் ஊ ற் றி க் கொண்டு எச்சரிக்கையோடு நின்றிருந்த முதியவர் ஆதிமூலத் தேவர் வெகு நயமான-நிதானமான இடுக்கோடு ராமையாவை லாகு கொடுத்து, வாகு கணித்துச் சாடிச் சமாளித் துக் கொண்டார். ராமையாவின் பிடரியிலே ஒரு பிடி முடுக்கி, அந்தப் பிடியை முறுக்கி அவரை நெஞ்சோடு அழுத்திக் கீழே தள்ளினர்.

கீழே விழுந்துவிட்ட தன் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவராக, பேந்தப் பேந்த விழித்தார் சிங்கப்பூர்ச் சீமான், சுற்றிச் சூழப் பார்வையை வெட்டினர். வெட்டுக் கடாவாக ஒரு துள்ளல் துள்ளினர். அவர் ஆசை யோடு எதிர்பார்த்த மாதிரி ஆதிமூலத் தேவரின் கையிலிருந்த அந்த வைரச் சிமிக்கி அசந்து மறந்து கீழே விழுந்து கிடந்தால்தானே? ஆதிமூலம் அந்த வைரச் சிமிக்கியைப் பத்திரமாக இடுப்பு மடியில்