பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

荔7

முடி போட்டு வைத்துக் கொண்டிருந்த சிதம்பர ரகசியம் அவருக்கு விளங்கினுல்தானே?

ஆதிமூலத்திற்கென்று அப்படியொரு நிர்த் தாட்சண்யமான அட்டகாசச் சிரிப்பு நினைத்த மாத்திரத்திலே கூடி வருகிறது. கைகூடி ஒடி வரு கிறது.சிரித்தார். இடுப்பு மடியைத் தந்திரப் போக் கோடு லாகவமாகத் தடவிப் பார்த்து நிம்மதி யடைந்தார். இருந்திருந்தாற் போலத் தாவிக் குதித்தார். அடுத்த மூன்ருவது நிமிடம், அவருடைய திருக்கரத்தில் மற்ருெரு வைரச் சிமிக்கியும் கண் சிமிட்டிச் சிரிப்பை வெடித்துப் பொடிக்கத் தலைப் பட்டது. டேய் ராமையா! நீ என்னை ஏமாற்றின ரெண்டாயிரம் ரூ பா ப் க்கு இப்பத்தாண்டா கணக்குச் சரியாகப் போச்சு உன்னுேட இந்த ரெண்டு வைரச் சிமிக்கியும் என்னுேட அனுமத்துப் பணம் ரூபாய் ரெண்டாயிரத்துக்கும் இப்பத் தாண்டா ஈடு ஆகுது!’ என்று குரோதம் மண்டிய நிம்மதியோடு கொக்கரித்து விட்டு அடுத்த வைரச் சிமிக்கியையும் இடுப்பு மடியில் கெட்டியாக முடி போட்டு முடிந்து கொண்டே கொல்லேப் புறத்தை விட்டு நகர முயன்ருர். -

அடிப்பட்ட வெம்புலிக்கு அவமானம் மூளுவது இயற்கை; ஆத்திரம் கொப்பளிப்பது இயல்பு. ஆதிமூலத் தேவரின் குடுமியைப் பற்றி மடக்க லானர் ராமையாத் தேவர். х

திமிறிக் கொண்டு விடுதலை அடைந்திட முயன்ற பெரியவர் ஆதிமூலத் தேவர், அவ்வாறு