பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

క్షీ

ஆசை அத்தானக் குழந்தைத்தனமான நிர்மலப் டோக்கோடு ஊடுருவிஞள்.

சுயப்பிரக்ஞை கொண்ட ஆதிமூலம், ஒகோ: அப்படியா சங்கதி சரி, சரி. நான் என் முடிவை உன் கிட்டே சொன்னப்பவே நீ என்கிட்டே சொல்வி யிருக்கோணும் ஊம், இப்போது சொல்லப்பா, வீரமணி!” என்று கேட்டுக் கொண்டார். நெஞ்சு அடித்துக் கொண்டது!

அன்னக்கொடி தவித்தாள்:

"நான் என்னுேட ஆசை அன்னத்துக்கு அருமை யான புருசனுக ஆகப் போறேனுங்க, அப்பா!' என்று தன்னுடைய தீர்ப்பைத் தெரியப்படுத்தினுன் வீரமணி!

16; நாலுகால் பாய்ச்சலில் அதிசயம்!

ராமையாத் தேவர் சிவபுரிச் சொக்கத்தை விட்டு மீண்டார். சிவபுரிச் சுருட்டை ஒரு சுண்டுச் சுண்டி வீசினர்.

ஒட்டி வந்தது மெட்டிச் சத்தம்.

‘சத்தம்' கொடுக்காமல், அச்சத்தத்தை நெஞ்சில் வாங்கிக்கொண்டார் சிங்கப்பூர்ச் சீமான். பாசம், கவரிமானகத் துள்ளியாட, ஏறிட்டு விழித் தார். தங்கப் பல் இரண்டும் மங்கி விடாமல் சிரிப்பை வெள்ளோட்டம் விட்டார். .