பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

இ. ஆ..?

தினுள். பழைய வீட்டின் முகப்பில் நின் று கொண்டு, எதிர்ப்புறம் அழகு காட்டிய புதிய வீட்டை ஒரு முறை நோக்கிள்ை. பிறகு என்ன நினைத்துக் கொண்டளோ? விளக்கைத் துாண்டித் துக்கிப் பிடித்து, புதிய மனயைப் புதிய உள்ளத்தோடு பார்வையிட்டாள். ஆனந்தக் கனவும் இன்பம் பெருமூச்சும் பின்னிப் பிணைய, ஒர் இமைபொழுது வரை இமைக்காமல் நின்ருள். சுய நினைவை ஆட் கோண்டதும், அவளது பேசும் விழிகளின் இமைகள் பேசாமல் படபடத்தன-வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்குமே, அப்படி 'அப்பா' என்று நிதான மான குரலெடுத்துக் கூப்பிட்டாள் அன்னக்கொடி, கொண்டைப் பூக்கள் கெண்டை மீன்களெனக் குலுங்கின.

சொல்லு, ஆத்தா!' என்று தவிப்பை அடக்க மாட்டாமல் கூறினர் யாமையா.

அப்பா, நாம ஏற்கனவே போட்டு வச்சிருக் கிற திட்டப் பிரகாரமே ஆவணி பிறந்தடியும். நம்மோட புது வீட்டிலே குடி புகுந்து பால் காய்ச்சிக் குடிச்சிப்பிடுவோம்! அப்படித்தானுங்களே?' என்று கேட்டாள். அப்பா காணவேண்டுமென்று விரும்பி யவள் மாதிரி, மறு பயணமும் அவள் தன்னுடைய தங்கச் சிமிக்கிகளே வருடியும் நெருடியும் விட்டுக் கொண்டாள்.

புதல்வியின் சூட்சுமமான இச் செயலைக் கவனிக்கவும் ராமையாத் தேவர் தவறிவிடவில்லை; கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டு மென்ற