260
6
நிலைக்கவில்லை. இருட்டைச் சுமந்தவளாக, இருட்
டைத் துளைத்தவண்ணம், இருட்டோடு இருட்டாக ஒடிக்கொண்டிருந்தாள் அந்தக் கன்னி!
18. வாழும் சொந்தங்கள் வாழும்:
வாழ்க்கை சுவைமிக்க நவீனமாக அமைந்திட வேண்டுமென்றுதான், கன்னி அன்னக்கொடி கனவு பின்னிக் கொண்டு, காலத்தோடு $Fథ f°.. விளையாடிக் கொண்டிருந்தாள்:
ஆளுல்...?
"நினைப்பது மாத்திரம் வாழ்க்கை அல்ல; தினைப்பதை மறப்பதும், அல்லது மறைப்பதும் கூட வாழ்க்கைதான்!” என் கின்ற நிதர்சனத் தத்து வத்தைச் சொல்லிக் காட்டுவது மாதிரி, அவள் கடந்த சில நாட்களிலே எத்தகைய எதிர்பாராத சம்பவங்களையெல்லாம் எதிர்கொள்ள நேரிட்டு விட்டது!
முந்திய நாள் இரவு நடந்த நிகழ்ச்சியை மீண்டும் மனத் திரையில் உலவ விட்டாள்.
வெள்ளைக்காளையை யாரோ திருட்டுத்தனமாகப்
பிடித்துக் கொண்டு ஒடும் சேதியை பண்ணைக் காரன் பரமசிவம் மூலம் கேள்விப்பட்டாளோ, இல்லையோ, அக்கணமே கிறுக்குப் பிடித்த பாவனையில் வெள்ளக் காளையைத் தேடி ஓட்டம் எடுத்தாள் அன்னக் கொடி, தங்கச்சியோ!' என்று அலட்டியவாறு,