பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

2 Ꮾ 8

அவள்-அன்னம் சிரிக்கவில்லை. - ஆணுல், அவன்-வீரமணி அவளைச் சிரிக்க

வைத்துவிட்டான்!

19. சிலட்டுர்ப் பவளக்கொடி!

உலை கொதித்துக் கொண்டிருக்கின்றது!... அன்னக்கொடி பதறிப் பெருமூச்செறிந்தாள். வாசலில் சத்தம் கேட்டது. அப்பா தஞ்சாவூரிலிருந்து அதற்குள் எப்படித் திரும்ப முடியும்?-ஊகூம்!...

ஆல்ை, வாசலில் விதி'யாகக் காட்சியளித்தவள் சிலட்டுர்ச் செல்வமகள் பவளக்கொடி!

அன்னக்கொடிக்குப் பவளக் கொடியை மறந்தே போய் விட்டது!...

"அன்னம், என்னை உனக்கு நினைப்பு இல்லையா?” என்று விசாரித்தாள் பவளக்கொடி. எடுப்பான நாசி முனையிலே எடுப்பாகச் சிரித்தது அந்த மரு’! பவளக் கொடியை ஏற இறங்கப் பார்வை யிட்டாள் அன்னக்கொடி. எடுத்த எடுப்பில் அவள் பார்வையில் எடுப்பாகப்பட்டது பவளத்தின் காதுச் சிமிக்கிகள் சிந்திய வைர ஒளிதான். அடுத்தபடி யாக அவள் சந்தித்தது பவளத்தின் அந்தப்