295
之95
முடிவுக்கு வந்தவளாகத் தலையை உறுதிப்பாட்.
டோடு ஆட்டினுள்.
அப்போது, தோல்பையும் கையுமாக வந்தார் சிங்கப்பூர்ச் சீமான் ராமையாத் தேவர். தோளில் தொங்கும் கோலாலம்பூர்க் குடையை லாகவமாக எடுத்துத் திண்ணையில் வீசினர்.
அப்பாவா? வாங்க வாங்க!' என்று வாய் கொள்ளாமல் சிரித்தவாறு, எதுவுமே நடக்காத மாதிரி, மகிழ்வுடன் தந்தையை வரவேற்ருள் அன்னக்கொடி. அல்லி அரசாணி மாலே சிரிக் கிறது. ... . . . * .
'அன்னம்! என்னேட செங்கமலத்தை வைரச் ஒமிக்கிகளை ஆசைகாட்டிக் காடு மாற்றியிருக்காங் களாம் சிலட்டுர்க் கங்காணி பெரிய கருப்பத் தேவரும் உன் மாமன் ஆதிமூலத் தேவரும். நானே அந்தப் பெரிய மனுசங்க ரெண்டு பேரை யுமே காடு மாற்றப் போறேனுக்கும். அதுமட்டும் இல்லே! எனக்குக் கடன் பட்டிருக்கிற ஊர் நாட் _ாண்மைக்காரர் ஆதிமூலத் தேவரோட வீடு வாசல், காணி கரை சாடாவையும் விடிஞ்சதும் ஏலத்துக்கு விடப்போறேன்: ஆமா. அப்பாலே தம்ப வைரச்சிமிக்கிகளுக்காக அவர் பேரிலே தாவா கொடுக்கவும் போறேன்!” -
ராமையாவின் இப்பேச்சு திக்கெட்டும் ஒலிக்கஎதிரொலிக்க ஆரம்பித்தது!