பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


சீமை முருங்கைப் போத்து, வெண்ணிறப் பூக்கள் சிணுங்கச் செழித்துத் தழைத்து வளர்ந் திருக்கிறது.

ஆடுதுறை வாழைகளுக்கு ஈரம் மிகுதிதான்.

அதோ, பூக்களின் தோட்டம்!-சாதி மல்லியும், வெள்ளை ரோஜாவும், சூரியகாந்தியும், துலுக்கச் சாமந்தியும் புன்னகைப் பூ தூவிச் சிலிர்த்துச் சிரித்துக் கொண்டிருக்கின்றன! மலர்களை அணைந்த கதிர்கள் நாணம் பூத்தன. கதிர்களை அணைத்த மலர்கள் மணம் பூத்தன.

அற்புதம்!-'காட்டுத் தீப் பூக்கள் காலையி லேயே அந்திச் செவ்வானத்தைச் சித்திரமாக்கி விட்டனவே!

மண்வளம் ஆராய்ந்து இந்தப் பூங்காவை அவன் இங்கே உருவாக்கிய தருணத்திலே பதியன்’ இனங்களையும் விதை ரகங்களையும் அண்ணுமலை நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. காலம் என்னும் மணல் வெளியில் பதிந்திட்ட அடிச்சுவடுகளா இந்தப் பூஞ்செடிகள்! அல்லது, பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவும் என்ப தற்கு அமைந்திட்ட உயிர்ச் சாட்சிகளா?...ஆகா!... மேரி கோல்ட் மலர்கள் எவ்வளவு ரம்மியமாகப்

பொன்னுெளி சிந்திக் கண் சிமிட்டுகின்றன!

தென் கோடியினின்றும் மறுகினன் அவன். தாய்ப்பசு தன்கன்றைப் பாசம் சொட்ட நக்கிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன், அவனது