பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39



களேன்!...இந்தத் துகையல் சாமான்யமில்லேங்க. இது உங்க நெஞ்சுக் குருத்திலே நேர்முகமாய் முனைப் போட பாய்ஞ்சு உறைக்குமாக்கும்! அப்பத்தான் உங்க நினைவிலே உங்க அன்னம் சுள்ளாப்போடே. சதா உறைச்சுக்கிட்டே இருப்பாளாக்கும்! அத்தான், நான் அடிக்கொரு வாட்டி செப்புற தொப்ப, நான் வீட்டிலே நல்ல விளக்கு கொளுத்தி வச்சு, உங்க ளுக்கு நான் முந்தானே தருகிற அண்ணேக்குத்தான் உங்களைப் பெத்த புண்ணியவதியோட ஆத்மாவும் என்னை பெத்த மகராசியோட ஆத்மாவும், மெய்யா லுமே அமைதியடைய ஏலுமுங்க! ஆமாங்க, இது சத்தியமுங்க; அது மட்டுமில்லே! இதுதான் தரும மும் கூட!’ -

உணர்வுகள் சுகந்தம் பரப்பிச் சுழிக்கப் .ேசி ளுள் சிங்கப்பூர்த் தேவர் ராமையாவின் செல்லப் பூங்கொடி அன்னக்கொடி!

வெளவால்கள் சடு குடு ஆடின. வீரமணி. மண்ணே உணர்ந்தான். பாசத்தை உணர்ந்தான். 'அப்பாவுக்கு நெஞ்சு உடைஞ்சதாலே தான் நெஞ் சடைப்பு அடிக்கடி வந்து தொலைக்குது. போன கிழமை தஞ்சாவூர்லே நீதிமன்றத் தீர்ப்பை அறிஞ் சிக்கிட்டதும் மூச்சடைச்சு அவதிப்பட்டாங்க அப்பா. நாளை ஒட்டாமல் அவங்களை தஞ்சாவூருக்கு இட்டுக்கிட்டுப்போய் பெரிய வைத்தியமாய்ச் செஞ் சால் தான் அப்பா பிழைப்பாங்க! நானும் பிழைப் பேன்! கண்கள் கசிந்தன. என்னவோ அரவம்