பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

போல விலகக் கருவியாக இருந்த அந்த விந்தைச் சக்தியை அவன் மனப்பூர்வமாகத் தொழுதான்; போற்றினன். r

ஏறுமுகக் கதிரவன் நிலா முற்றத்தில் காய்ந்து கொண்டிருக்கிருன்.

விதைப்புக்கான நிலக்கடலே அரிசிகள் வெய் யிலில் காய்ந்து கொண்டிருக்கின்றன.

செத்துப் பிழைத்த தேவர் இப்போதுதான் புரண்டு படுத்தார். பட்டு மெத்தை கருவேல முள்ளாகக் குத்தியது போலும்! கலவரமும் கலக்க மும் சுழிக்க, மல்லாந்து படுக்கலானர். பாதாளக் கேணியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தண்ணி ராக அவருடைய கண்ணிர் தென்பட்டது.

வீரமணிக்குத் தி.கீரென்றது. அப்பா!' என்று விளித்தான். பாசம் நெஞ்சை அடைக்கிற மாதிரி இருந்தது, அவனுக்கு. இதே பாசம் தான் அப்பா வின் நெஞ்சையும் அடைத்துவிட்டிருக்குமோ? அலங்கோலமாகக் கிடந்த தந்தையைக் கண் கொண்டு பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந் தது; வாய் விட்டு ‘ஓ’ வென்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தால் கூடத் தேவலாம் போலிருந்தது. கதறிப் புலம்பிக் கண்ணிரைக் கரை சேர்த்து விட்டால் மாத்திரம், மனச்சுமை கரை சேர்ந்து விடுமா, என்ன? ஊகூம்: ஒருகாலும் இல்லே!...'அப்படி யென்ருல், அந்தச் சுமைகளையெல்லாம் எந்தச் சுமைதாங்கியில் எப்போது எப்படி இறக்கி வைப்ப