பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

அவர். புகையிலைச் சிதறல் உணக்கை கூட்டியது. பெற்றெடுத்த அன்புப் புதல்வனே அருமையாகவும் பெருமையாகவும் என்னவோ ஒரு புதிய நம்பிக்கை யோடு ஊடுருவிப் பார்வையிட்டார். பின்னர் இருதயப் பகுதியைப் பிசைந்து கொண்டார். 'வீரமணி,' என்று கூப்பிட்டார்.

சொல்லுங்க, அப்பா!' என்ருன் வீரமணி. சோதனைக்குத் தயாராகும் மானவனைப்போல, என்னவோ ஒர் இலட்சியக் குறிப்புடன் அவனும் தன் பங்கிற்கு அப்பாவை ஊடுருவத் தொடங் கின்ை, தஞ்சை மாவட்ட நீதி மன்றத்தின் திர்ப்பை வெளியிலே எடுக்கலானன் அவன்.

உறை கிழிக்கப்பட்ட உறைக் கடிதம் ஒன்றை விரமணி வசம் ஒப்படைத்தார் தேவர். சிதம் பரத்தைச் சேர்ந்த லட்சாதிபதி மகள் தமிழ ரசியைப் பத்தி நீ ரொம்பப் பெருமையாய்ச் சொல்லிக்கிட்டிருப்பியே, அந்தப் பொண்ணு உனக்கு என்னென்னமோ எழுதி அனுப்பியிருக்குது, தம்பி, அதை மறுகா தனியே படிச்சுக்கலாம்...!” என்று குறிப்பிட்டார். பின்பு, சற்று நேரம் பேச்சு மூச்சு காட்டவில்லை. வீரமணியை மேலோட்ட மாகக் கவனித்தார். கிழிக்கப்பட்டிருந்த கடிதத் தின் வாயைச் சலனத்தோடு தடவிக் கொடுத்தபடி சிந்தனைக்கு ஆளாகி 'கம் மென்றிருந்த தனயனைக் கண்டதும், அவர் கனைப்புச் சத்தம் எழுப்பினர். விரமணி, நீ கையிலே அடக்கி வச்சிருக்கியே அதுதானேப்பா கச்சேரித் தீர்ப்பு நகல்?’ என்று