பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ό

செய்திருக்க வேண்டும்! சுயப்பிரக்கினே கண் திறந் தது; அவன் கண்களைத் திறந்தான்.

பசுமைப் புரட்சியின் அடித்தளங்கள் எத்தனை பெருமையோடும் பெருமிதத்தோடும் இளங் காலை வெய்யிலிலே பளிச்சிட்டு மின்னிக் கொண்டிருக்கின் றன!

அவனது அழகான இதழ்க் கரையில் நயமான புன்னகை விநய்மாகக் கரை சேர்ந்தது. 'தமிழ்ச் சமுதாயத்தின் வளப்பம் மிக்க வருங்காலத்துக்குக் கட்டியம் கூறிடத்தான் இம்மாதிரியான சின்னஞ் சிறு கிராமங்களெல்லாம் கூடப் பொருளாதார ரீதியிலும் விஞ்ஞான முறைமையிலும் முன்னேற் றம் அடைந்து கொண்டிருக்கின்றனவே! அப்பால் தமிழ் மண் நிறக்க-தமிழ்ச் சாதி சிறக்கக் கேட்கவா வேண்டும்?-தனக்குரிய சமுதாயக் கடமையைச் சுற்றி அவன் சிந்தனைகள் அறிவு பூர்வ மாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் ஆறுதலோடு பற்றிப் படரத் தலைப்பட்டன.

அப்போது :

உந்திக் கமலத்தினின்றும் புறப்பட்ட குர லொன்று காலத்தை வெல்லும் அறைகூவலுடன் பாய்ந்து வருகிறது.

‘அண்ணு!......” -

நாடி வந்த பாசத்தின் அழைப்பொலி ஒடி வந்து அவனுடைய பாசத்தின் நெஞ்சில் எதிரொ லித்ததுதான் தாமதம்; அவன் உள்ளம் சிலிர்த்தது: