பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

8 1

பட்ட சூதோடு அப்படிச் சவால் விட்டிருப்பான் என்கிற துப்புக் கூடவா எனக்குப் புரியாது? பாவியி லேயும் பாவி, பைத்தியக்கார பாவி!...பரம்பரை பரம்பரையாய் உசிருக்கும் மேலாகக் கட்டிக் காத்து கிட்டு வருற நம்ப குடும்பத்து மானத்தை-மரியா தையை- கவுரவத்தைப் பங்கப்படுத்தறதுக்கு, இந்தப் போகுடிப்பயலுக்கு வயது போதுமாக்கும்? நாறப் பொட்டச்சி செங்கமலச் சிறுக்கி பின்னுடி அலைஞ்சு திரிகிற இவனுேட சுரணை கெட்ட மானத்தை இவனுேட தட்டுக் கெட்ட பணமா நாளைக்கு காப்பாத்தப் போகுதாம்? ...நான் மட்டும் உயிர் தரிச்சிருந்தேனுல்ை, என்னைச் சோதிக்க நினைக்கிற அந்தக் கிராதகன் ராமையாவுக்கு. ஈரலிலே பித்தா, இல்லே, எலும்பிலேதான் பித்தா அப்படின்னு ஒரு கை பார்க்காமலா இருப்பேன்?...'

கருக்கரிவாள் மீசையை எத்துணை ரோசத்துட. னும் ஆத்திரத்துடனும் முறுக்கிவிட்டுக் கொண் டிருக்கிருர் தேவர்!...

வீரமணியின் மனக்கொதிப்பு அடங்கவில்லை. பற்கள் ஒன்ருேடொன்று உராய்ந்து மோதிக் கொண்ட சத்தமும் ஒயக் காணுேம். சுருள் முடிகளை இடது கை விரல்களால் கோதி நெருடி விட்டான். வலது கையிலிருந்த தமிழரசியின் கடிதத்தைச் சுற்றின நினைவையே அவன் மறந்து விட்டான் போலும்!

இளைஞர் சங்கத்தை அடுத்திருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புறப்பட்ட மணி