பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

9 ei

மாட்டினன். அப்பா புறப்பட வேண்டியது தான் பாக்கி சரி; சிலட்டுரில் அப்பாவுக்கு அப்படி என்ன புதுஅலுவலாம்? விடுகதையும் புதிரும் அப்பாவைத் துறந்து திரும்பிப் பார்க்காமல் ஒட்டம் பிடிக்க எப்போது வேளை கூடிவருமாம்?...

நல்லதம்பி சற்று முன் சொல்லிச் சென்ற நல்ல சேதி அவனுக்கு வியப்பளித்ததில் வியப்பில்லே. ‘என்னுேட கல்யாணத்தைப் பற்றின சங்கதி மாப் பிள்ளையான எனக்குத்தெரியாமல், ஊர்க்காட்டிலே சாட்டுத் தீயாய் எப்படிப் பரவுச்சாம்? ஒரு வேளை, இந்தச் சேதி என்ைேட அன்னத்துக்குத் தெரிஞ் சிருக்குமோ? நெருப்பு இல்லாமல் புகையுமா என்ன? அப்படின்னு, செட்டியார் கேள்விப்பட்ட விசயம் உண்மையேதான? நான் தெரிஞ்சுக்கிட வேண்டிய மங்களகரமான சமாசாரம் அப்படின்னு மட்டும் தான் அப்பா கோடி காட்டிப் பேசிளுங்க. அந்த அளவிலே அந்த மங்களச் செய்தி அநேகமாய் என் கல்யாணத்தை ஒட்டியதாகத்தான் இருந்தாகனும் என்கிறது புரியுது எனக்கு. ஆளு, அப்பா தன் திட்டத்தைப் பற்றி, தன்முடிவைக் குறிச்சு எதொண்ணையும் உடைச்சுப் பேசமட்டேன் என் கிருரே? என் கனவுப் பிரகாரமும் ஊருக்குள்ளாற பே ச் சு கிளம்பியிருக்கிறதுக்கு ஒத்தபடியும் என்னேட முறைப் பெண் அன்னமேதானே எனக்கு வாழ்க்கைப்படுவாள்? மனம் இருந்து, வழிபிறந்தாச் சின்ன- எந்த அதிசயக் கூத்துதான் நடக்காமல் தப்ப முடியும்?-இனம் விளங்காத தவிப்பும்,இனம் புரிந்த களிப்பும் அவனே ஆட்டிப் படைத்தன. ஒரு