பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

புதிதாக ஆகிறவன் என்ற பொருள் தராமல் என்றும் உள்ள நிலையைச் சுட்டியது; அதை வற்புறுத்தவே என்றும் என்ற சொல்லைப் பெய்தார். ‘என்றும் பிரானாவான்’ என்க. அம்பவளம்-காண்பதற்கு அழகாக உள்ள பவளம். மைத்து-மை நிறம் பெற்று; இருண்டு. அமர்ந்த-தங்கிய. என்றும் உள்ளவனைச் சேர்ந்தமையால் அந்தக் கரிய நிறம் அங்கே தங்கியது. “கறை நிறுத்திய கண்டன்” என்று திருவிளையாடற் புராணம் கூறும். மற்று அசை. மெய்த்து-மெய்த்தன்மையைக் கொண்டு. மெய்யாக என்றபடி. மெய் என்பதனடியாக மெய்த்து என்ற எச்சம் வந்தது. அமர்ந்து-பொருந்தி; அலையாமல் பொருந்தி என்றபடி. அன்பாய்-அன்பே வடிவமாய்; குணம் வேறு, குணி வேறு என்ற பேதம் தோன்றாமல் அன்பு வடிவமே ஆகி என்றபடி. விரும்பு-விருப்பம் கொள். பிறவற்றை விரும்பினால் அந்த விருப்பமே பிறவிக்கு ஏதுவாகி விடும். அவனை விரும்பினால் பிறவியைப் போக்கி விடலாம்.]

இறைவனிடம் மெய்யன்பு பூண்டு வாழ வேண்டும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 93-ஆவது பாட்டு இது.