பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560

ஈதே என்பது நின் திருமுடியாகிய இடத்தில் இருப்பவள் என்ற பொருள் உடையது. சலமகளும்—சலமகளின் நிலையும். ஈது—இந்தத் திருமுடியில் இடங்கொள்வது என்று பொருள் கொள்ள வேண்டும். ஈங்கு—இவ்வாறுள்ள. அன்பு அணியார்-அன்புக்கு அணிமையாக இருப்பவர்; அண்ணியார் என்பது அணியார் என்று இடக்குறை. அன்பை அணிகலமாகக் கொண்டவர் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு—இவ்விடத்தில். அன்பணியார் ஆர், சொல்லுமின் என்று கூட்டி முடிக்க.]

இறைவனோடு உரிமையுடன் உரையாடும் இயல்புள்ளவராதலின் இவ்வாறு கேட்கிறார்.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 95-ஆவது பாட்டு இது.