பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570

பிறங்க அனல் ஏந்தித்
தீஆடுவாய்!

அந்தப் பெருமானைப் பார்த்து ஒரு வினாவை எழுப்புகிறார். நான் விடுக்கும் இந்த வினாவுக்கு விடை கூறு' என்கிறார்.

இதனைச் செப்பு.

‘அழலினால் உன்னுடைய உள்ளங்கை சிவந்ததோ?’ என்று முதலில் வினவுகிறார்.

அழல் ஆட அங்கை சிவந்ததோ?

தீயே தன் வடிவமாக இருக்கும் இறைவனுக்கு இந்தத் தீ எம்மாத்திரம்? அவன் தீயிலேயே நடனமாடுகிறானே! அந்தத் தீயினால் அவனுக்கு வெப்பம் உண்டானால் அவனால் ஆட முடியுமா? பெருந்தீயாகிய அவனுக்கு அது குளிர்ந்து தான் இருக்கும். நீரில் ஆடுவது போலத் தீயில் ஆடும் அவனுக்கு அவன் கையில் எடுத்த தீயானது சுடுமா? அதன் வெம்மையில் உள்ளங்கை சிவக்குமா?

தீயும் செந்நிறம் உடையதுதான். அவன் திருக்கரமும் செம்மையுடையது. தீயின் சிவப்பு அவன் உள்ளங்கையில் சிவப்பை உண்டாக்கியது என்று சொல்வது பொருத்தம். இல்லையானால், அந்த உள்ளங்கைச் சிவப்பே அதில் ஏந்தும் தீக்குச் செந்நிறத்தை உண்டாக்கியதோ?

இறைவனுடைய அழகான அங்கையின் செம்மைதான் அந்த அழலில் ஏறியிருக்க வேண்டும்.

அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ?

இப்படி வினாக்களை எழுப்பிய அம்மையார் இறைவனேயே, “எது உண்மை என்பதைச் சொல் அப்பா!' என்று கேட்கிறார்.