104 கால ஆராய்ச்சி தெரியக்கூடவில்லை. இந்த ஒன்று தவிர, சுந்தரர் குறித்த கழற்சிங்கன் குறிப்புக்கட்கும் மேற்சொன்ன இராசசிங்கன் குறிப்புக்கட்கும் நிறைந்த ஒற்றுமை காணப்படுகின்றது. இனி, மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புக்களைக் காண்போம்: இவன் வரலாற்றை அறிய, இவனைப் பற்றிய கல்வெட்டுக்களும் இவன் மகனது பாகூர்ப் பட்டயமும் இவன்மீது பாடப்பெற்ற நந்திக்கலம்பகமும் துணைபுரிகின்றன. நந்திவர்மன் I (கி.பி. 840-865) 1. இவன் வடபுலத்தில் வாகை சூடியவன்; தமிழரசர் மூவரையும் தெள்ளாற்றில் முறியடித்துத் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் எனப் பெயர் பெற்றவன். இவன் காலத்தில் கடல் வாணிகம் நன்கு நடைபெற்றது. சீகாழிக்கடுத்த நாங்கூரிலிருந்து சென்ற பெருமகன் ஒருவன், இப்பல்லவன் பெயரால் சையாமில் குளம் ஒன்று தொட்டான் எனின், இப்பல்லவனது புகழ் கடல் கடந்த நாடுகளிலும் பரவி இருந்ததென்னலாம். இவன் சிறந்த கடற்படையுடையவன் என்று கலம்பகம் குறிக்கிறது. இவற்றால் இவன் பேரரசன் என்பது எளிதில் விளங்கும். 2. இவன் சிறந்த போர்வீரன் என்பது மேற் சொன்ன இரு போர்களால் விளக்கமாகும். இவன், “அறைகழல் முடித்த அவனி நாரணன்', எனவும் "குரைகழல் வீரநந்தி" எனவும் “பல்லவர்கோள்அரி (பல்லவருட்சிங்கன்) எனவும் கலம்பகத்திற் பாராட்டப் பெற்றவன். இத்தொடர்கள், சுந்தரர் குறித்த 'கழற் சிங்கன் என்ற பெயரை மெய்ப்பித்தல் காண்க. 3. இவன் "சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று கலம்பகம் குறிக்கிறது. இவன் சிறந்த சிவபக்தன் என்பதை வேலூர்ப்பாளையப்பட்டயத்தாலும் அறியலாம். 4.நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசர் மூவரையும் நன்கு முறியடித்தான் என்பது கலம்பகத்தாலும் கல்வெட்டுக்களாலும் வெளியாகின்றது. இதனைத்தான் சுந்தராது தில்லைப் பதிகமும் குறித்ததாதல் வேண்டும். நந்திக்குத் தமிழரசர் திறைகட்டினர் (அடங்கியவர்) என்பது கலம்பகத்தால் தெரிகிறது." சுந்தரர் குறித்த குறிப்புக்கள் அனைத்தும் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புக்களோடு ஒன்றுபடல் காணத்தக்கது. அவற்றில் சிறப்பாகப் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவர் (தெள்ளாற்றில் முறியடிக்கப்பட்ட) தமிழ் மூவேந்தராக இருக்கலாம் என்று நினைக்க இடமுண்டாதல் காண்க. இங்ங்னம் நினைக்கக்கூட இராசசிங்கன் வரலாற்றில் இடமின்மை முன்பே காட்டப்பட்டது.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை